states

img

உ.பி-யில் மீண்டும் ஒரு போலீஸ் என்கவுன்டர்!

உத்தரப் பிரதேசத்தில் அனில் துஜானா என்ற பிரபல கேங்ஸ்டர் என்கவுன்டரில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  
கொலை, கொள்ளை, பணம் பறிப்பு உள்பட 62 வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட பிரபல கேங்ஸ்டர் அனில் துஜானா, கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி தான் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில், மீரட்டில் இன்று அனில் துஜானாவை சுற்றி வளைத்த சிறப்புப் படை போலீசார், அவரை என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2017 முதல் தற்போது வரை 183 பேர் என்கவுன்டரில் கொல்லப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.